Posts

  'வாள்" பெற்ற பெருவாழ்வு !......                                                                 இ.இராஜேஸ்கண்ணன் ஆண்டவன் கையில் ஆயுதமாய் இலங்குகையில் ஆணவம் கொன்றேன் அசுரரை வென்றேன்!.... புவியாண்ட மன்னர் உறையகத்து உறைந்தகாலை புகழ்மாந்தி மன்னர் தலைக்கனம் ஏறவைத்தேன்!.... இனவெறியர் கையில் இசைந்திருந்த நாளில் நிணங்குருதி சொட்டப் பிணங்குவித்தேன் பாரில்!.... நிசமில்லாக் 'ஹீரோ"க் கரம் பற்றும்போதில் விசமூட்டிப் பிஞ்சு மனவன்மம் வளர்த்தேன்!.... 'ஆவாவின்" கையில் நானனேறியமர்ந்த நாளாய் யாரை விட்டேன்நான் ஊரை உறையவைத்தேன்!..... பீதிகொடுத்தேன், பிஞ்சுகளைக் கொன்றொழித்தேன், நாதியிலா நலிந்தோரை நாணமின்றித் தோற்கடித்தேன், பாதிவழி போகமுன்னர் பறித்தேன் யௌவனத்தை, புகைபோதை துணையோடு புகழோங்கி நான் நிமிர்ந்தேன்!.... கோதில்விழுச் செல்வமொல்லாம் கொன்றே யொழித்திட்டேன் கொலை கொள்ளை வரைசெல்லும் 'கொலு"வதனை நான்கொடுத்தேன் நிலைமாறு காலத்தின் நிம்மதியை நான் தொலைத்தேன் நிலைமாற வேண்டுமென்றால் 'கடவுள்" என்னைக் காவவேண்டும்!...... அசுரரை அழிப்பதொன்றும் அவ்வளவு சுலபமில்லை கடவுளே கவனம்

கொட்டிச் சிந்திக் காசைவிட்டு!......

 கொட்டுகின்றோம் கொட்டுகின்றோம் கோடிகோடி யாகக்காசை மட்டில்லாத மகிழ்வுஎய்தி மார்புதட்டி நமைவியந்தோம்!... ராசராச சோழனுக்கு நேசமுள்ள 'பாட்டி"நாங்கள் வரலாறு நம்பெயரை மறவாமல் போற்றிநிற்கும்!.... விண்ணுயர்ந்த கோபுரங்கள் பொன்னிழைத்த கலசங்கள் மண்மிதிக்கக் காணாத 'மாமிள்"தரைமினுங்கும் கண்கொள்ளாப் பொலிவுடனே விண்விழுங்கும் சொக்கட்டான் எண்ணம்போல் மதிலெழுப்பி எல்லாமே எமதானோம்!.... ஒருகட்டை தாண்டிநீளும் ஒளிசுரக்கும் மின்விளக்கு ஓடியோடி ஒளிசிந்தும் ஒய்யாரச் சரவிளக்கு பாடிக் கதறிக்காதுப் பறையுடைக்கும் ஒலிபெருக்கி பத்துக்கூட்டு மேளடியும் பறையோடு பொம்மலாட்டம் கொட்டிச்சிந்திக் காசைவிட்டு கோ~;டியொன்று விடியும்வரை மட்டில்லாத ஆசைதீர்க்க குட்டைச்சட்டை போட்டஆட்டம் வகைதொகையாய் வெடிவாங்கி வானம் பிளக்கவிட்டோம் வெடிபோட்டுக் கொத்தாக வீழ்ந்தகதை நாம்மறந்தோம்!.... எட்டுலட்சம் வெடிக்குஎன்று எழுப்பமாகப் பேசக்கேட்டும் முட்டில்சாகா மூலமூர்த்தி ஒட்டிநின்றார் கருவறையில்!!...